தென்காசி: ஆலங்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2.11 கோடி முறைகேடு புகாரில் முன்னாள் செயலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். 2016-21 வரையிலான அதிமுக ஆட்சியின்போது ஆலங்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2.11 கோடி முறைகேடு என புகார் எழுந்துள்ளது. முறைகேடு தொடர்பாக கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் உள்பட 2 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் நடந்த ரூ.2.11 கோடி முறைகேடு தொடர்பாக 60 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
The post ஆலங்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2.11 கோடி முறைகேடு புகாரில் முன்னாள் செயலர் உள்பட 2 பேர் கைது! appeared first on Dinakaran.