×

காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்

பொன்னேரி: பொன்னேரி, சர்மா நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன் (25). இவர் சென்னையில் வேலை பார்த்தபோது, அங்கு அழகுநிலையத்தில் வேலை பார்த்த புதுவை மாநிலத்தை சேர்ந்த மைதிலி (20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த 2 மாதங்களுக்குமுன் இருவரும் திருமணம் செய்து கொண்டு, பொன்னேரியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். கடந்த 18ம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற இளம்பெண் மைதிலி திடீரென மாயமாகிவிட்டார்.

இதுகுறித்து பொன்னேரி போலீசில் நேற்று மைதிலியின் மாமியார் புகார் அளித்தார். எஸ்ஐ பரந்தாமன் தலைமையில் போலீசார், சிசிடிவி காமிரா பதிவுகள் மற்றும் பிற காவல் நிலையங்களுக்கு இளம்பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி விசாரிக்கின்றனர்.

The post காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Muthukumaran ,Sharma ,Chennai ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்