×

குடியாத்தத்தில் வங்கிக்கு சென்ற முதியவரை சரமாரி தாக்கி பணம் பறிப்பு: 3 பேருக்கு வலை

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் வேணு (69). இவர் நேற்றிரவு குடியாத்தம் அடுத்த கீழ்ஆலத்தூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ₹1.50 லட்சத்தை டெபாசிட் செய்ய சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் மையம் பழுதடைந்திருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் பணத்துடன் வீடு திரும்பி கொண்டிருந்தார். நாகல் கூட்ரோடு பகுதி வழியாக பைக்கில் வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த 3 பேர் கும்பல் இவரை திடீரென வழிமறித்தது. அதிர்ச்சியடைந்த வேணு, பைக்கை நிறுத்தினார்.

அந்த நேரத்தில், 3 பேரும் வேணுவை சரமாரி தாக்கி பணத்தை கேட்டனர். மறுத்ததால் மீண்டும் சரமாரி தாக்கி கீழே தள்ளி விட்டு ₹1.50 லட்சம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் நேற்றிரவு புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து பணம், செல்போன் ஆகியவற்றை பறித்த 3 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

The post குடியாத்தத்தில் வங்கிக்கு சென்ற முதியவரை சரமாரி தாக்கி பணம் பறிப்பு: 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Vellore District ,Netteri ,Lower Alathur ,Elder Valley ,Dinakaran ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் எலும்புக்கூடான நிலையில் ஆண் சடலம் மீட்பு