×

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை சாகுபடி வயலில் உரம் தெளிக்கும் பணி

*விவசாயிகள் மும்முரம்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி வயலுக்கு உரம் தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதிகளில் முன் கூட்டியே சாகுபடி செய்த கோடை சாகுபடி முடிந்து, தற்போது பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி பணி தொடங்கியுள்ளது.

நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி இயந்திர அறுவடை முடிந்து பூவனூர், தஞ்சாவூர் சாலை, மன்னை சாலை,ராஜப்பையன் சாவடி, காளாச்சேரி, கடம்பூர், கோவில்வெண்ணி, அனுமந்தபுரம், ரிஷியூர், சித்தமல்லி, பரப்பனாமேடு, கடம்பூர், மேலபூவனூர் உள்ளிட்ட வேளாண் கோட்டப்பகுதிகளில்முன்கூட்டியே சாகுபடி செய்த கோடை சாகுபடி முடிந்து, தற்போது குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளது.இந்த குறுவை சாகுபடி தொடங்கி நடவு பணி முடிந்து, தற்போது மேல் உரம் தெளிக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை சாகுபடி வயலில் உரம் தெளிக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Needamangalam Agricultural Fort ,Thumumuram ,Nidamangalam ,Nidamangalam Agricultural Fort ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் களையை கட்டுப்படுத்த கோனோவீடர் கருவி