சென்னை: நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; தமிழ்நாட்டில் பாஜகவை மக்கள் ஒழித்துவிடுவார்கள். நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு கடுமையாக எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது.
ஆளுநர் தமிழ்நாட்டுக்கே கேடு. ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. கையெழுத்து இயக்கம் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றேன். திமுகவுடனான மதிமுக கூட்டணி தொடரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உறுதி. ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை படையெடுத்தாலும் பெரியார் மண்ணில் அவர்கள் வெற்றி பெற முடியாது. இவ்வாறு தெரிவித்தார்.
The post நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது; தமிழ்நாட்டில் பாஜகவை மக்கள் ஒழித்துவிடுவார்கள்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி appeared first on Dinakaran.