×

(தி.மலை) துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு கீழ்பென்னாத்தூரில்

கீழ்பென்னாத்தூர், ஜூன் 21: கீழ்பென்னாத்தூர் திரவுபதியம்மன் கோயிலில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் திரவுபதியம்மன் கோயிலில் மகாபாரத அக்னி வசந்த விழாவை முன்னிட்டு கடந்த 27ம் தேதி மகாபாரத சொற்பொழிவு தொடங்கியது. தினமும் மகாபாரத சொற்பொழிவு மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து, நேற்று துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா நடந்தது. மேலும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை நடந்த தீமிதி விழாவில் காப்புக்கட்டிய பக்தர்கள் விரதமிருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post (தி.மலை) துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு கீழ்பென்னாத்தூரில் appeared first on Dinakaran.

Tags : T.Malai ,Duryodhanan ,Kilibennathur ,Kilibennathur Drarubathiyamman ,Tiruvannamalai District ,
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...