×

கள்ளக்குறிச்சி அருகே போலி ஆவணம் மூலம் ₹1 கோடி சொத்து அபகரிப்பு

கள்ளக்குறிச்சி, ஜூன் 21: கள்ளக்குறிச்சி ஏமப்பேர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மனைவி வள்ளியம்மை எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள உலகங்காத்தான் கிராம எல்லையில் எனது பெயரில் கடந்த 5.9.1979 மற்றும் 26.2.1985 ம் தேதியிட்ட இரண்டு பதிவு செய்யப்பட்ட கிரய பத்திரங்கள் மூலம் ஒரு ஏக்கர் நிலம் கிரயம் செய்யப்பட்டது. சுமார் ரூ. 1 கோடி ஆகும். இந்த நிலத்தின் மூலப் பத்திரத்தை எனக்கு தெரியாமல் வீட்டில் இருந்து எனது மகள் ஷீலா எடுத்து சென்று எனது பெயரை போலி ஆவணம் தயாரித்து அவரது மகன் சந்துரு (பேரன்) பெயருக்கு தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி வைத்தது தெரியவந்தது. இதற்கு எனது மருமகன் சக்திவேல் மற்றும் சிலர் இணைந்து ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனது பெயரில் உள்ள சொத்தை அபகரித்து பத்திரப்பதிவு செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டி கள்ளக்குறிச்சி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. எனவே போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட மகள், பேரன், மருமகன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட எஸ்பி மோகன்ராஜ் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

The post கள்ளக்குறிச்சி அருகே போலி ஆவணம் மூலம் ₹1 கோடி சொத்து அபகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kadakkurichi ,Kallakkurichi ,Soundarrajan ,Anna Nagar ,Vallliyam SP ,Dinakaran ,
× RELATED தமிழைப்பற்றி பேசி தமிழர்களை ஏமாற்றப்...