×

தடுப்பு காவல் சட்டத்தில் கஞ்சா பெண் வியாபாரி கைது

வேப்பூர், ஜூன் 21: விருத்தாசலம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சக்தி தலைமையிலான போலீசார் போதை மற்றும் மது குற்றங்கள் சம்பந்தமாக விளக்கப்பாடி கிராமத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விளக்கப்பாடி மேற்கு தெருவை சேர்ந்த ஏழுமலை மனைவி தனலட்சுமி (33) என்பவர் சுமார் 1 கிலோ 150 கிராம் கஞ்சா வைத்திருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில், இவர் மீது விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு, கம்மாபுரம், சேத்தியாதோப்பு, விருத்தாச்சலம் காவல் நிலையங்களில் 4 கஞ்சா வழக்குகள் உள்ளது. இவரது குற்றச்செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின்பேரில், அவரை ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து தனலட்சுமி ஓராண்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

The post தடுப்பு காவல் சட்டத்தில் கஞ்சா பெண் வியாபாரி கைது appeared first on Dinakaran.

Tags : Veypur ,Vriddhachalam Prohibition Police ,Inspector ,Sakthi ,
× RELATED குரும்பலூர்,வேப்பந்தட்டை, வேப்பூர்...