×

சாலையை அகலப்படுத்த கோரிக்கை

 

சிங்கம்புணரி, ஜூன் 21: சிங்கம்புணரி அருகே பிரான்மலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் சிங்கம்புணரியில் இருந்து கிருங்காக்கோட்டை வழியாக பிரான்மலை செல்லும் சாலை இரண்டு பேருந்துகள் செல்லும் வகையில் இருவழி சாலையாக உள்ளது. ஆனால் சிங்கம்புணரியில் இருந்து வேங்கைபட்டி வழியாக செல்லும் சாலை ஒரு பேருந்து செல்லும் அகலத்திற்கு மட்டுமே உள்ளது.

பிரான்மலைக்கு கிருங்காக்கோட்டை வழியாக செல்லும் தூரத்தை விட வேங்கைப்பட்டி வழியாக செல்லும் தூரம் குறைவாக உள்ளது. சாலை அகலம் காரணமாக கிருங்காக்கோட்டை வழியாக அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. இதனால் வேங்கைப்பட்டி சாலையை அகலப்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் எம்.கோவில்பட்டி, காட்டு கருப்பன்பட்டி, வேங்கை பட்டி, உள்ளிட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.

The post சாலையை அகலப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Branmalai ,Dinakaran ,
× RELATED சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் முல்லைக்குத் தேர் கொடுக்கும் பாரிவிழா