×

பல்லடம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

 

பல்லடம், ஜூன் 21: பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி வின் சிட்டியில் வசித்தவர் முருகேசன்(52). தொழிலாளி. இவர் நேற்று வீட்டில் வளர்க்கும் கோழிகளை கூண்டில் அடைப்பதற்காக சென்றபோது, வீட்டின் மேல் தாழ்வாக செல்லும் மின் கம்பியில் இவரது கை பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்,ப க்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாககூறினார். இதையடுத்து அவரது மகன் கவுதம்ராம் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பல்லடம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Palladam ,Murugesan ,Ganapathipalayam panchayat ,Dinakaran ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...