×

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

 

விருதுநகர், ஜூன் 21: விருதுநகர் அருகே செங்குன்றாபுரத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி(32). இவருக்கும் கணவர் ராமகிருஷ்ணனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து வழக்கு நிலவையில் உள்ளது. நேற்று முன்தினம் புவனேஸ்வரி தனது வீட்டில் இருந்தார். அப்போது ராமகிருஷ்ணன், அவரின் தந்தை முருகையா, தம்பி அஜித்குமார் மூவரும் வந்து வழக்கை வாபஸ்பெற சொல்லி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த புவனேஸ்வரி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆமத்தூர் போலீசார் ராமகிருஷ்ணன், முருகையா, அஜித்குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Bhubaneswari ,Sengunrapuram ,Ramakrishnan ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு