×

மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலி

திருவிடைமருதூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அடுத்துள்ள வடமட்டம் நடுத்தெருவில் வசித்தவர் ஜானகிராமன் மகன் மகேந்திரன் (34) கொத்தனார். இவர் நேற்று ஏழாம் கட்டளை மாதாகோவில் தெருவில் புதிதாக கட்டப்படும் வீட்டில் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பில்லருக்குரிய கம்பியை தோளில் தூக்கி சென்றபோது. அவ்வழியே சென்ற தெரு மின்விளக்குரிய உயர்மட்ட மின்கம்பி உரசியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரனை அருகில் இருந்தோர் உடனே தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருநீலக்குடி எஸ்.ஐ ஞானமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதித்து விசாரிக்கின்றனர். இறந்த மகேந்திரனுக்கு சத்யா (28) என்ற மனைவியும், ஈஸ்வரன் (5) என்ற மகனும் உள்ளனர்.

The post மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலி appeared first on Dinakaran.

Tags : Mason ,Thiruvidaimarudur ,Mahendran ,Janakiraman ,Vadamattam Nudhutheru ,Aduthurai ,Thanjavur district ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை