×

குண்ணம் அரசு பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஓவியப்போட்டி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குண்ணம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஓவியப்போட்டி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் முதன்மை மேலாளர் ஜான்சுகுமார் முன்னிலை வகித்தார். குண்ணம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் இலக்கியா பார்த்திபன் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார். இந்த போட்டியில், சுமார் 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கபட்டன.

The post குண்ணம் அரசு பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஓவியப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Child Labor Eradication Painting Competition ,Kunnam Government School ,Sriperumbudur ,Sriperumbudur Union ,Kunnam Government High School ,Elimination of Child Labor Painting Competition ,Dinakaran ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்