×

காஞ்சிபுரத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது என்று மின் வாரிய செயற் பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் தெற்கு கோட்ட மின் வாரிய செயற் பொறியாளர் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில், தமிழ்நாடு மின்சார வாரியம் காஞ்சிபுரம் தெற்கு கோட்ட உட்பட்ட பகுதியில் மின்சார தொடர்பான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (22ம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு மின்சார சம்பந்தமான புகார்களை நேரடியாகவும் அல்லது கடிதம் மூலம் வழங்கி தீர்வு காணலாம்.

The post காஞ்சிபுரத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Consumers ,Kangipuram ,Kanchipuram ,Electrical ,Board ,Executive Engineer ,Prasad ,Kanzipuram ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு