×

வீட்டில் விளையாடியபோது விபரீதம் சிறுவன் கழுத்தில் சேலை இறுக்கி பலி

திருவள்ளூர்: வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் சேலை இறுக்கியதால் பரிதாபமாக இறந்தான். திருவள்ளூர் அடுத்த புட்லூர் பி.வி.ஆர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன். எலக்ட்ரீசியன். இவரது மகன் தமிழ் மாறன் (8). இவர், காக்களூரில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்த ஊஞ்சலில் சேலையை தனது கழுத்தில் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சிறிதுநேரத்தில் அவரது சேலை கழுத்தை பலமாக இறுக்கியது.

இதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடும் அவதிப்பட்டார். வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து தமிழ்மாறனை அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தமிழ்மாறன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் விளையாடிய சிறுவன் கழுத்தில் சேலை இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post வீட்டில் விளையாடியபோது விபரீதம் சிறுவன் கழுத்தில் சேலை இறுக்கி பலி appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Putlur PVR ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...