- பயிற்சி
- கூடுதல் பதிவாளர்
- ஓய்வூதியர் சங்க அலுவலகம்
- வறையூர், திருச்சி
- மதுரை
- நெடுஞ்சாலைகள் ஆணையம்
- திருச்சி
- கரூர்
- கூட்டுறவு பயிற்சி நிறுவனம் இன்றைய திட்ட ஓய்வூதியர் பணிக்குழு
- வரையூர்,
- தின மலர்
மதுரை: டோல்கேட்டுகளை அகற்றக் கோரிய வழக்கில் நெடுஞ்சாலை ஆணைய திருச்சி, கரூர் திட்ட இயக்குநர்கள் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, ஒத்தக்கடையைச் சேர்ந்த வக்கீல் சுதாகர் நாகராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சி மாவட்டம் மகேந்திரமங்களம் தான் எனது சொந்த ஊர். வாரந்தோறும் ஊருக்கு காரில் சென்று வருகிறேன். கரூர் – கோவை மெயின் ரோட்டில் திருச்சி முதல் குளித்தலை இடையே திருச்சி மாவட்டம் திருப்பராய்துறை ராமகிருஷ்ணா தபோவனம், கரூர் மாவட்டம் மாயனூர் மனவாசி, அரவக்குறிச்சி அருகேயுள்ள தென்னிலை, திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஆகிய 4 இடங்களில் டோல்கேட்டுகள் அமைந்துள்ளன. இதற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், தென்னிலை மற்றும் பொங்கலூர் டோல்கேட்டுகள் அகற்றப்பட்டன.
பொதுவாக நான்கு வழிசாலையில் தான் டோல்கேட்டுகள் இருக்க வேண்டும். ஆனால், இந்த சாலை இருவழி சாலையாக மட்டுமே உள்ளது. சாலையின் இடையே பாதுகாப்பு தடுப்புகளும் இல்லை. திருப்பராய்துறை டோல்கேட்டில் ஆம்புலன்ஸ் மற்றும் விவிஐபிக்கள் செல்ல தனி பாதை இல்லை. இதனால், அவசர நேரங்களில் கூட 10 நிமிடம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பல உயிர்கள் பலியாகும் நிலை உள்ளது. இந்த இரு டோல்கேட்டுகளும் தற்போது விதிகளுக்கு மாறாக சட்டவிரோதமாக செயல்படுகின்றன. எனவே, திருப்பராய்துறை மற்றும் மனவாசி டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும். இரு டோல்கேட்டுகளையும் அகற்றுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திருச்சி மற்றும் கரூர் திட்ட இயக்குநர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 6 வாரம் தள்ளி வைத்தனர்.
The post கூட்டுறவு பயற்சி நிலையத்தை கூடுதல் பதிவாளர் ஆய்வு இன்றைய நிகழ்ச்சி ஓய்வூதியர்கள் செயற்குழு கூட்டம் நேரம்: காலை 10.30 மணி இடம்: ஓய்வூதியர்கள் சங்க அலுவலகம், உறையூர், திருச்சி. டோல்கேட்டுகளை அகற்ற கோரி வழக்கு appeared first on Dinakaran.