×

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு கும்பகோணம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் நத்தம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம்-சென்னை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூர் நத்தம் கிராம பகுதியில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடிவதில்லை என கூறி அந்த பகுதி பொதுமக்கள் பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அது மட்டுமில்லாமல் நத்தம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலை தூர்வாரிய மண்ணை அதே பகுதியில் கொட்டியதால் அந்த பகுதி முழுவதும் சேர் சகதியானது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் பலர் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் சென்னை சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் நேற்று ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த கும்பகோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம்-சென்னை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

The post அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு கும்பகோணம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Love Mahesh Stir ,Kumbakonam ,Dakkori ,Koranadi Karupur Natham ,Love Magesh ,Dinakaran ,
× RELATED இதுவரை இருந்த பிரதமர்களில் நரேந்திர...