×

இளம்பெண் தற்கொலை

 

திருவாடானை, ஜூன் 20: திருவாடானை அருகே சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் பன்னீர்செல்வம்(33). இவரது மனைவி சித்திரைச்செல்வி(28). 10 மாத கைக்குழந்தை உள்ளது. நேற்று சித்திரைச்செல்வி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரைச்செல்வியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி இரண்டு வருடமே ஆவதால், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

The post இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Panneerselvam ,Chellathurai ,Subramaniapuram ,Chithiraichselvi ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்