×

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழா துவக்கம்

நாகப்பட்டினம், ஜூன் 20: நாகூரில் புகழ் பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கபடும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் ஆண்டகையின் கந்தூரி விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று தொடங்கியது. துல்ஹஜ்ஜு பிறை என்பதால் அலங்கார வாசல் முன்பு தொட்டில் பந்தல் அமைக்கப்பட்டது. வியாபாரிகள் மற்றும் பக்தர்கள் அவரது வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக காணிக்கை பொருட்களை அந்தத் தொட்டில் பந்தலில் கட்டினர். 3 நாட்களுக்கு தர்கா உட்புறம் மெளலூது நடைபெறும். வரும் 21ம் தேதி மாலை சின்ன ஆண்டவர் சாமதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், இரவு தர்கா அலங்கார வாசலில் இருந்து பூகலேபு ஊர்வலம் புறப்படும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை போர்டு ஆப் டிரஸ்டிகள் செய்திருந்தனர்

The post நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழா துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam District Nagore Dharga Kanduri Festival ,Nagapattinam ,Nagore ,Hazrat ,Lord Shine ,Nagapattinam District Nagur Dharga Kanduri Festival ,
× RELATED நாகையில் மிதமான மழை பொதுமக்கள் மகிழ்ச்சி..!!