×

பெண்ணின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தில்லையாடியில் பெண் சாவில் மர்மம் உள்ளதாக அப்பெண்ணின் உறவினர்கள் புகார் கூறி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்மபாடி அருகேவுள்ள தில்லையாடி உத்திராபதியார் கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (36). கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நளமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் மதுபாலா(28) ஆகிய இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 2 வயது பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது பெண் வீட்டார் 17 பவுன் நகை, ரூ.4 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களை வரதட்சணையாக வழங்கியதாக கூறப்படுகிறது.

தற்போது செந்தில்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், செந்தில்குமார் மற்றும் அவரது வீட்டில் உள்ளோர், மேலும் ரூ.10 லட்சம் , 10 பவுன் நகை கேட்டு கடந்த சில மாதங்களாக மதுபாலாவை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி தில்லையாடியில் உள்ள தனது வீட்டில் மதுபாலா மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து அதிர்ச்சியடைந்த மதுபாலா குடும்பத்தினர் உடனடியாக தில்லையாடி சென்று செந்தில்குமார் குடும்பத்தாரிடம், மதுபாலா மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மதுபாலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post பெண்ணின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Thillaiyadi ,Tharangambadi, Mayiladuthurai district ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...