×

பழவேற்காட்டில் கூலி தொழிலாளியின் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

பொன்னேரி: பழவேற்காட்டில், சாலையோரம் கிடந்த கூலித் தொழிலாளியின் சடலத்தை போலீசார் மீட்டனர். பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்(44). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி ஜெயலட்சுமி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஆனந்தன் வேலைக்கு செல்ல வெளியே சென்றிருக்கிறார். அதன்பிறகு அவர் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பல்வேறு இடங்களில் குடும்பத்தினரும் உறவினர்களும் தேடி வந்தனர். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் நிலையில் இருந்தது. இந்நிலையில், பழவேற்காடு அருகே கரிமணல் கிராமப்பகுதியில் நேற்று காலை தேங்கிய மழைநீருக்கு அருகே ஒரு ஆணின் சடலம் கிடந்தது.

தகவலறிந்த திருப்பாலைவனம் எஸ்ஐ குமணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக வீட்டிலிருந்து கிளம்பி சென்று காணாமல் போன கூலித்தொழிலாளி ஆனந்தன் எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அச்சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூலித்தொழிலாளியின் மர்ம மரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post பழவேற்காட்டில் கூலி தொழிலாளியின் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Palavekkad ,Anandhan ,Palavekadu ,Ponneri.… ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...