×

நரிக்குறவ பெண் பொய் புகார் கொடுத்ததாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

மாமல்லபுரம்: நரிக்குறவ பெண் போலீசில் பொய் புகார் அளித்ததாகக்கூறி வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்த நரிக்குறவ பெண் அஸ்வினி (24). இப்பெண், சமூக வலைதலம் மூலம் பிரபலமானார். இந்த, நரிக்குறவ பெண் கடந்தாண்டு தாங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர் பிழைப்பு நடத்த கடை ஒதுக்கித்தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், 3 கடைகள் ஒதுக்கி அதற்கான ஆணையை வழங்கினார்.

இந்நிலையில், நரிக்குறவ பெண் அஸ்வினிக்கு ஒதுக்கிக்கொடுத்த கடையை விட்டு, விட்டு கடற்கரைக்கு செல்லும் குறுகலான பாதையை ஆக்கிரமித்து ஒரு கடை போட்டு வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால், அப்பெண்ணுக்கும் அங்குள்ள சில வியாபாரி சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பெண், வியாபாரி சங்கத்தை சேர்ந்த ஒரு பெண் மீது கடந்த 10 நாட்களுக்கு மாமல்லபுரம் போலீசில் புகாரளித்தார். நேற்று, போலீசார் இரு தரப்பையும் அழைத்து பேசினர்.

அப்போது, விசாரணைக்கு வந்த வியாபாரி சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டோர் நரிக்குறவ பெண் போலீசில் பொய் புகார் அளித்துள்ளதாகக்கூறி காவல் நிலையம் முன்பு நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வியாபாரி சங்கத்தினர் கூறுகையில், நரிக்குற பெண் அஸ்வினி, வியாபாரிகள் மீது தொடர்ந்து போலீசில் பொய் புகார் அளிப்பது, வியாபாரிகளை வியாபாரம் செய்யவிடாமல் மிரட்டுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே, போலீசார் பொய் புகார் அளித்த நரக்குறவப்பெண் மீது தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த வாரம் வியாபாரிகள் சங்கம் சார்பில் 3 நாட்கள் கடைகளை அடைத்து கடும் எதிர்ப்பு தெரிவிப்போம்’ என்றனர்.

The post நரிக்குறவ பெண் பொய் புகார் கொடுத்ததாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...