×

தூத்துக்குடியில் பேவர்பிளாக் சாலை, பூங்கா பணி

தூத்துக்குடி, ஜூன் 20: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் பேவர்பிளாக் சாலை, பூங்கா பணிகளை மேயர் ஜெகன்பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான கான்வென்ட் ரோடு பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் தூத்துக்குடி மாசிலாமணி புரத்தில் நீண்ட ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி இடத்தை மீட்டு பூங்கா அமைக்கும் பணிகள், முத்தையாபுரம் ரவுண்டானா பகுதியில் பாதசாரிகள் ஓய்வு எடுப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் நீண்ட காலமாக தனி நபர் ஆக்கிரமித்துள்ள பூங்கா உள்ளிட்ட இடங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் பொதுமக்கள் பயன்படும் வகையில் பூங்காக்கள், சுகாதார மையங்கள், பசுமைதூத்துக்குடி திட்டத்தில் மரங்கள் வளர்த்தல் போன்றவை அமைக்கப்படும், என்றார்.அப்போது திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கவுன்சிலர்கள் பேபி ஏஞ்சலின், சரவணன், வட்ட செயலாளர் பொன்ராஜ், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடியில் பேவர்பிளாக் சாலை, பூங்கா பணி appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Mayor ,Jaganperiyasamy ,Thoothukudi Municipal Corporation ,Paver ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...