- என்.சி.சி
- பொக்ரான் அணு ஆயுதச் சோதனை
- செங்கல்பட்டு
- போச்ரான் அணு ஆயுத சோதனை
- செங்கல்பட்டு மாவட்டம்
- பொக்ரான் அணு ஆயுதங்கள் சோதனை வெள்ளிக்கிழமை விழா
- விழிப்புணர்வு ரயில்
- தின மலர்
செங்கல்பட்டு: பொக்ரான் அணு ஆயுத சோதனை வெள்ளி விழாவையொட்டி, என்சிசி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைப்பெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள டாக்டர் மங்களம் உயர்நிலைப் பள்ளியின் என்சிசி மாணவர் படை அலுவலர் ஸ்ரீகுமார் ஒருங்கிணைப்பில், பொக்ரான் அணு ஆயுத சோதனை வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில், எஸ்ஆர்எம் கல்லூரி வளாகத்தில் கடந்த 10 நாட்களாக அப்பள்ளி என்சிசி மாணவர் படையினரின் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்நிலையில், இப்பயிற்சி முகாமின் நிறைவு நாளான நேற்று மாலை பொக்ரான் அணு ஆயுத சோதனையின் சிறப்பு குறித்து தமிழ்நாடு சிக்னல் கம்பெனி என்சிசியின் கமாண்டிங்க் அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் என்சிசி மாணவர் படையினரின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த என்சிசி மாணவர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பங்கேற்றனர்.
The post பொக்ரான் அணு ஆயுத சோதனை வெள்ளி விழாவையொட்டி என்சிசி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.