×

அமெரிக்காவில் ஒரே நாளில் 6 இடங்களில் துப்பாக்கிசூடு 6 பேர் பலி, 49 பேர் படுகாயம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 6 இடங்களில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவங்களில் 6 பேர் பலியாயினர்.49 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவில் பள்ளி,கல்லூரிகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் அப்பாவிகள் மீது துப்பாக்கியால் சுட்டு சிலர் வெறிசெயலில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு இந்த வன்முறைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சிகாகோவில் உள்ள வில்லோபுரூக் பார்க்கில் நேற்றுமுன்தினம் காலையில் நடந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் ஒருவர் பலியானார். சிறுவர்கள் உட்பட 23 பேர் படுகாயமடைந்தனர். இதில் துப்பாக்கிசூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதே போல் வாஷிங்டன் ஸ்டேட் கேம்ப் கிரவுண்டில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது ஒருவர் கூட்டத்தினரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில், 2 பேர் பலியாயினர்.2 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிசூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பென்சில்வேனியாவின் லெவிஸ்டன் பகுதியில் போலீஸ் முகாம் உள்ளது. கடந்த சனிக்கிழமையன்று போலீஸ் முகாமுக்குள் லாரியை ஓட்டி வந்த ஒருவர் துப்பாக்கிசூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலியானார். இன்னொருவர் படுகாயமடைந்தார். இதில் அந்த நபரை போலீசார் சுட்டு கொன்றனர். இதே போல் செயின்ட் லூயிஸ்,தெற்கு கலிபோர்னியா,பால்டிமோர் ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிசூடு வன்முறை சம்பவங்களில் ஒருவர் பலியானார். 23 பேர் படுகாயமடைந்தனர்.

The post அமெரிக்காவில் ஒரே நாளில் 6 இடங்களில் துப்பாக்கிசூடு 6 பேர் பலி, 49 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : United States ,Washington ,America ,
× RELATED அமெரிக்காவில் போராட்டத்தை...