×

ரோகித்சர்மாவுக்கு பின் கேப்டன் யார்?; தேர்வர்களுக்கு கிரிக்கெட் அறிவே இல்லை: மாஜி வீரர் பாய்ச்சல்

மும்பை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் தேர்வாளருமான திலீப் வெங்சர்க்கார் அளித்துள்ள பேட்டி: ரோகித்சர்மாவுக்கு பின் அடுத்த கேப்டனை உருவாக்க அணி தேர்வு குழுவினரும், கேப்டனும் தவறிவிட்டனர். கடந்த சில ஆண்டுகளில் கேப்டன் பதவியை வகித்த பலருக்கு தொலைநோக்கு பார்வை இல்லை.

இதில் துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால், கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக நான் பார்த்த தேர்வாளர்களுக்கு விளையாட்டைப் பற்றிய பார்வையோ, ஆழ்ந்த அறிவோ, கிரிக்கெட் உணர்வுகளோ இல்லை. முக்கியத்துவம் இல்லாத தொடர்கள் அவர்கள் ஷிகர் தவானை இந்திய கேப்டனாக்கினர். இதுபோன்ற தொடரில் தான் நீங்கள் வருங்கால கேப்டனை உருவாக்க முடியும்.

நீங்கள் யாரையும் வளர்க்கவில்லை. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியத்தைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால் பெஞ்ச்(அணி) பலம் எங்கே?, ஐபிஎல் தொடரின், ஒளிபரப்பு உரிமையில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பது மட்டும் சாதனையாக இருக்கக்கூடாது, என சாடி உள்ளார்.

The post ரோகித்சர்மாவுக்கு பின் கேப்டன் யார்?; தேர்வர்களுக்கு கிரிக்கெட் அறிவே இல்லை: மாஜி வீரர் பாய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Rohit Sharma ,Mumbai ,Dilip Vengsarkar ,Paichal ,Dinakaran ,
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...