×

சென்னையில் கனமழை… பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்ட 10 விமானங்கள்; 17 பன்னாட்டு விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!!

சென்னை : சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் விடிய விடிய பலத்த மழை பெய்து வருவதால், சென்னைக்கு வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள் பெங்களூரூக்கு திருப்பி விடப்பட்டன.சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை தொடங்கிய மழை, இரவு முழுவதும் இடி, மின்னல் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பிரதான சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சுரங்கப்பாதைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. மரங்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மழைபொழிவு அதிகமாக இருந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இன்று அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை வரவிருந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. Ek-542-துபாய், QR-528-தோகா, EY-268-அபுதாபி, BA-35-லண்டன், G9-471-சார்ஜா, FZ-447-துபாய், AI-274-கொழும்பு, 6E1002-சிங்கப்பூர், 6E-1278-மஸ்கட், AI-906-துபாய் உட்பட 10க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமிட்டு பறந்தன. ஆனால் வானிலை சீரடையாததால் பின்பு அந்த விமானங்கள் பெங்களூருக்கு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல் சென்னையில் இருந்து அந்தமான், பிராங்க்பார்ட், துபாய், லண்டன், அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட 10 இடங்களுக்கு செல்ல வேண்டிய 17 பன்னாட்டு விமானங்களும் சுமார் 3 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.

The post சென்னையில் கனமழை… பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்ட 10 விமானங்கள்; 17 பன்னாட்டு விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bangalore ,Dinakaran ,
× RELATED 100% வேலை வாய்ப்பு பெற்று தரும் ஆச்சார்யா பெங்களூர் பி-ஸ்கூல்