×

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 37 பேர் குண்டாசில் கைது

திண்டுக்கல், ஜூன் 19: திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மட்டும் 37 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என எஸ்பி பாஸ்கரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1.1.2023 முதல் 17.6.2023 வரை பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 37 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 37 பேர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Tags : Dindigul district ,Kundazi ,Dindigul ,Goondasil ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...