×

இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கல்

கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள காலேஜ் ரோட்டில் அன்னை தெரசா நற்பணி மன்றம் சார்பில் மாணவ , மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் பள்ளி சீருடைகள் நேற்று வழங்கப்பட்டது. கும்பகோணம் பாலக்கரை பகுதியில் உள்ள காலேஜ் ரோட்டில் அன்னை தெரசா நற்பணி மன்றம் சார்பில் சுமார் 70 ஏழை மாணவ மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, இலவச நோட்டு புத்தகங்கள், சீருடை மற்றும் கல்வி உதவித்தொகை ஆகியவற்றை சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்களிடமிருந்து நிதியுதவி பெற்று நேற்று வழங்கப்பட்டது. இவ்விழாவில் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பரமசிவம் தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக திமுக மாமன்ற உறுப்பினர் பார்த்திபன், வாசுதேவன், மகிமைச்செல்வன், வில்சன் தர்மராஜ் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அன்னை தெரசா நற்பணி மன்றத்தலைர் சேகர நன்றி கூறினார்.

The post இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Mother Teresa Charitable Society ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...