×

விருதுநகர்-காவுத்தம்பாளையம் வரை உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு 36வது நாளாக தொடர் போராட்டம்

 

திருப்பூர், ஜூன் 19: விருதுநகர்-காவுத்தம்பாளையம் வரை அமைய உள்ள உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 36வது நாளாக காவுத்தம்பாளையத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள், இதற்கு சுப்பராயன் எம்.பி. ஆதரவு தெரிவித்தார். விருதுநகர் முதல் காவுத்தம்பாளையம் வரை அமைய உள்ள உயர் மின் கோபுர திட்டத்தின் துணை மின் நிலையம் அமைவதை எதிர்த்து காவுத்தம்பாளையத்தில் 36வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்திற்கு ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பலர் வந்து விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் சுப்பராயன் எம்.பி. நேற்று போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார். நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, திருப்பூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கௌரீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட சுப்பராயன் எம்பி, இதுகுறித்து தமிழக முதலமைச்சர், ஒன்றிய அரசு மின்துறை நிர்வாகத்திடமும் பேசுவதாக தெரிவித்தார்.

The post விருதுநகர்-காவுத்தம்பாளையம் வரை உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு 36வது நாளாக தொடர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar-Kauthampalayam ,Tirupur ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி