×

கோயில் பூட்டை உடைக்க முயன்ற வாலிபர் கைது

நெல்லை: கங்கைகொண்டான் அருகேயுள்ள வடகரை தெற்குத் தெரு அருணாசலம் என்ற கணேசன் (48). கங்கைகொண்டான் பஜாரில் காய்கறி, மளிகை கடை நடத்திவரும் இவர் அருகேயுள்ள வடகரை ஆற்றங்கரை சுடலை மாடசாமி கோயிலில் மேற்பார்வையாளராக உள்ளார். கடந்த 16ம் தேதி மாலை வழக்கம்போல் கோயிலை பூட்டிச்சென்ற இவர் மறுநாள் காலை திறக்கச் சென்றார். அப்போது அங்கு நின்ற மர்ம நபர் ேகாயில் பூட்டை உடைக்க முயற்சித்தார். பின்னர் அவர் அருணாசலத்தை கண்டதும் தப்பியோடினார். இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவின் பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் கங்கைகொண்டான் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வடிவேல் என்ற வடிவய்யா (23) என்பவர் திருடுவதற்காக கோயில் பூட்டை உடைக்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கோயில் பூட்டை உடைக்க முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Ganesan ,South Street Arunasalam ,Gangaikondon ,Gangaikondan Bazaar ,Dinakaran ,
× RELATED திருவேற்காடு நகராட்சியில் தூய்மை...