×

தொடர் விபத்தை கட்டுப்படுத்த கரூர் 16 கால் மண்டபம் அருகே பேரிகார்டு வைக்க வேண்டும்

கரூர்: கரூர் அருகே முக்கிய மூன்று சாலைகள் சந்திக்கும் 16 கால் மண்டபம் அருகே பேரிகார்டு வைத்து விபத்து ஏற்படாமல் வாகன ஓட்டிகளை பாதுகாக்க வேண்டும் என போக்குவரத்து போலீசாருக்கு கோரிக்கை எழுந்துள்ளது.கரூரில் இருந்து நெரூர், சோமூர், கோயம்பள்ளி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகள், பல்வேறு வாகனங்கள், அரசு காலனி, காளிபாளையம் வழியாக சென்று, 16 கால் மண்டபம் அருகே பிரிந்து செல்கிறது. இந்த 16 கால் மண்டபம் பகுதியில் நெரூர், திருமுக்கூடலூர் போன்ற பகுதிகளுக்கும், சோமூர், கோயம்பள்ளி போன்ற பகுதிகளுக்கும் சாலைகள் பிரிகிறது. இந்த இடத்தில் மூன்று வழிப்போக்குவரத்து நடைபெறுகிறது. பல்வேறு கிராம பகுதிகளை உள்ளடக்கிய இந்த சந்திப்பு பகுதியில் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சந்திப்பு பகுதியில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் அவ்வப்போது விபத்து சம்பவம் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில், இந்த பகுதியில் பேரிகார்டு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரிகார்டு வைக்க போக்குவரத்து போலீசார் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

The post தொடர் விபத்தை கட்டுப்படுத்த கரூர் 16 கால் மண்டபம் அருகே பேரிகார்டு வைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karur 16 Kal Mandapam ,Karur ,16-gallery hall ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...