×

போலீசார் எச்சரிக்கை வேலாயுதம்பாளையம் அருகேடூவீலர் மீது கார் மோதி இருவர் படுகாயம்

வேலாயுதம்பாளையம்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் வடக்கு தெருவை சேர்ந்த லட்சுமணகுமார் (32). இவருடன் வேலை பார்க்கும் கரூர் மாவட்டம் வாங்கல் அக்ரஹாரம் கிழக்கு பகுதியை சேர்ந்த வினித் (29) என்பவரும் வேலைக்குச் சென்று வேலையை முடித்துவிட்டு சேலம் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் நேற்றுமுன்தினம் மாலை வந்து கொண்டிருந்தனர். அப்போது லட்சுமணகுமார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் வினித் அமர்ந்திருந்தார். இவர்கள் அய்யம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது அதே சாலையில் பின்னால் அதிக வேகமாக காரை ஓட்டி வந்த கரூர் வெள்ளாளப்பட்டி நல்லப்பன் நகர் தொழில்பேட்டை பகுதியை சேர்ந்த அருண் (34), நிலைதடுமாறி காரை லட்சுமணகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் லட்சுமணகுமாரும், வினித்தும் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வினித் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் அருண் மீது வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

The post போலீசார் எச்சரிக்கை வேலாயுதம்பாளையம் அருகேடூவீலர் மீது கார் மோதி இருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Velayuthampalayam ,Lakshmanakumar ,Mohanur North Street, Namakkal district ,Wangal, Karur district ,Dinakaran ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்