×

கஞ்சா விற்ற பெண் கைது

திருச்சுழி, ஜூன் 19: திருச்சுழி அருகே மாங்குளம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜூனன். இவரது மனைவி தாடக நாச்சியார்(36). இவர் கல்லூரணி பகுதிகளில் கஞ்சா பொட்டலங்களாக விற்று வருவதாக எம்.ரெட்டியாபட்டி போலீசாருக்கு ரகசியதகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அடிப்படையில் திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் எம்.ரெட்டியபட்டி போலீசார் கல்லூரணி பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து சோதனை நடத்தினர்.

அப்போது கல்லூரணி பகுதியிலுள்ள பத்திரகாளியம்மன் கோயிலருகே சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த தாடக நாச்சியாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் இவர் அப்பகுதியில் நெடுங்காலமாக கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரிடமிருந்து சுமார் 120 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை விற்பனை செய்ததாக தாடக நாச்சியார் மீது வழக்குப்பதிவு செய்த எம்.ரெட்டியாபட்டி போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post கஞ்சா விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,Mankulam ,Thadaka Nachiyar ,
× RELATED நரிக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால்...