×

கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான். பாப்பாரப்பட்டி அருகே மாக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி மகன் கவியரசன்(10). இவன், மாக்கனூர் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால், நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வயல்வெளிக்கு விளையாடுவதற்காக சென்றான். அப்போது, அங்குள்ள கிணற்றில் இறங்கி குளித்துள்ளனர். சிறிது நேரத்தில் அனைவரும் கரைக்கு திரும்பியுள்ளனர். அனால், கவியரசன் கரைக்கு வரவில்லை. அவன் தண்ணீரில் மூழ்கியிருப்பதை அறிந்து நண்பர்கள் கதறி துடித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், பாலக்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி தேடினர். இதில், கவியரசன் சடலமாக மீட்கப்பட்டான். பாப்பாரப்பட்டி போலீசார் கவியரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

The post கிணற்றில் மூழ்கி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Paparapatti ,Gopi Makan ,Makanur village ,Papbarapatti ,Dinakaran ,
× RELATED கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது