×

விமானி திடீர் ஆப்சென்ட் டெல்லி விமானம் ரத்து: மாற்று விமானத்தில் பயணித்த பயணிகள்

சென்னை: சென்னை விமானநிலையத்தில் இருந்து நேற்று காலை 6 மணியளவில் புதுடெல்லி புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், 142 பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பிவைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 6 மணியளவில் 142 பயணிகளுடன் புதுடெல்லிக்கு ஏர்இந்தியா பயணிகள் விமானம் புறப்பட வேண்டும். இந்நிலையில், விமானி திடீரென விடுப்பு எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அந்த விமானம் ரத்தானது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக 142 பயணிகளும் விஸ்தாரா, இண்டிகோ விமானங்களில் புதுடெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். காலை 9.30 மணிக்கு புதுடெல்லி புறப்பட்டு சென்ற விமானத்தில் மீதமுள்ள பயணிகள் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் டெல்லியில் இருந்து சென்னை வரும் ஏர்இந்தியாவின் ஏஐ-429 விமானமும் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

The post விமானி திடீர் ஆப்சென்ட் டெல்லி விமானம் ரத்து: மாற்று விமானத்தில் பயணித்த பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chennai ,Air India ,Chennai airport ,New Delhi ,
× RELATED சென்னை-டெல்லி இடையே 16 விமானங்கள் ரத்து..!!