×

‘யூனிபார்மை கழட்டிட்டு வா உன்னை அறுத்து விடுவேன்’: போலீஸ்காரரை தாக்கி மிரட்டிய பாஜவினர் 2 பேர் கைது

தஞ்சை அடுத்த சிங்கபெருமாள் குளத்தில் ேமற்கு போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்த முயன்றனர். ஆனால் காரில் வந்தவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றதால், இரு போலீசார் டூவீலரில் துரத்தி சென்றனர். சீனிவாசபுரம் அருகே காரை மடக்கி நிறுத்தியபோது, காரில் குடிபோதையில் வந்த தஞ்சையை சேர்ந்த ஹரிபாபு மற்றும் காரல் மார்க்ஸ் ஆகியோர் ஆயுதப்படை போலீஸ்காரர் காட்டுராஜாவை ஆபாசமாக திட்டினர்.

காவலர் காட்டுராஜா: வண்டிய நிப்பாட்ட சொன்னா நிப்பாட்ட மாட்டீங்களா, எவ்ளோ தூரம் சேஸ் பண்ணி துரத்திட்டு வர்றது?

காரல் மார்க்ஸ்: யோவ், நான் எவ்ளோ சம்பளம் வாங்குறேன் தெரியுமா, நீ எவ்ளோ சம்பளம் வாங்குற.

காவலர் காட்டுராஜா: மரியாதையா பேசு…

ஹரிபாபு, காரல் மார்க்ஸ்: நீ கவர்மென்ட் சம்பளம் வாங்குற, யூனிபார்மை கழற்றிட்டு வா, அறுத்துடுவேன். இதையடுத்து போதையில் இருந்த இருவரும் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர். இச்சம்பவத்தை காவலர் காட்டுராஜாவுடன் வந்த மற்றொரு போலீஸ்காரர் செல்போனில் வீடியோ எடுத்தார். மேலும் அதனை சமூக வலைதளங்களில் பதிவும் செய்தார். தற்போது அந்த வீடியோ மற்றும் ஆடியோ வைரலாகி வருகிறது.

ஆயுதப்படை காவலர் காட்டுராஜா வீடியோவை சான்றாக வைத்து அளித்த புகாரின்பேரில் தஞ்சை மேற்கு போலீசார், ஹரிபாபு மற்றும் காரல்மார்க்ஸ் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வந்தனர். அப்போது, போதை வாலிபர்கள் இருவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்றும் தஞ்சை புது பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநில பாஜக துணை பொதுசெயலாளரான கருப்பு முருகானந்தம் வீட்டில் பதுங்கி இருப்பதாக வும் தெரியவந்தது. அவர்களை கைது செய்ய இருந்தபோது, நேற்று மாலை கருப்பு முருகானந்தமே இருவரையும் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தார். இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post ‘யூனிபார்மை கழட்டிட்டு வா உன்னை அறுத்து விடுவேன்’: போலீஸ்காரரை தாக்கி மிரட்டிய பாஜவினர் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Yamku ,Singaperumal pond ,Thanjavur ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...