×

உணவு பார்சலில் துண்டு பிளேடு

மதுரை: மதுரை, சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் மதிய சாப்பாடு பார்சல் வாங்கினார். வீட்டில் பார்சலை பிரித்து சாப்பிட முயன்றபோது பாதி உடைந்த பிளேடு துண்டு கிடந்தது. இதுபற்றி முகமது மற்றும் அவரது மனைவி ஓட்டலுக்கு சென்று காண்பித்தனர். இதில் இருதரப்பினரிடயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஓட்டல் உரிமையாளர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு முகமது புகார் செய்தார். இதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓட்டலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பணியாளர்கள் தலையுறை அணியாதது உள்ளிட்ட விதிகளை பின்பற்றாததால் நோட்டீஸ் அளித்தனர்.

The post உணவு பார்சலில் துண்டு பிளேடு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Mohammed ,Cholayazakupuram, Madurai ,Jaihindpuram ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...