×

பிலிப்பைன்ஸ் படகில் பயங்கர தீ விபத்து: 120 பேரும் பத்திரமாக மீட்பு

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் சிக்யூஜொர் மாகாணத்தில் இருந்து பொஹல் மாகாணத்திற்கு இன்று பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் 120க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். நடுக்கடலில் படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென படகில் தீ பிடித்து எரிந்தது. படகு முழுவதும் வேகமாக தீ பரவியதால், படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தங்கள் உயிரை காப்பாற்ற முயற்சித்தனர்.

தகவலறிந்த மீட்புப்படையினர் படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின், படகில் இருந்த 120க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாகவும், இதற்காக இரண்டு கப்பல்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பிலிப்பைன்ஸ் படகில் பயங்கர தீ விபத்து: 120 பேரும் பத்திரமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : MANILA ,Chiquizor province ,Philippines ,Pohal province ,
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!