×

மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை

போடி, ஜூன் 18: போடி பரமசிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆண்டவர். இவரது மனைவி காந்தமணி(70). ஆண்டவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களாக உடல்நலக்குறைவால் காந்தமணி பாதிக்கபட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த காந்தமணி, நேற்று அதிகாலையில் வீட்டில் இருந்த மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போடி நகர் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் காந்தமணியின் உடலை கைப்பற்றி, போடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Bodi ,Lord ,Bodi Paramasivan ,Temple Street ,kanthamani ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்