×

போதையில் ரகளை செய்த கும்பல் மீது வழக்கு

சாணார்பட்டி, ஜூன் 18: சாணார்பட்டி அருகே கொசவபட்டி புதுத்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (27). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் வெஸ்லி சுதர்சன் (23) மற்றும் கிஷோர் (20). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை சாணார்பட்டியில் உள்ள மதுக்கடையில் அதிக அளவில் மது குடித்துவிட்டு கடையில் இருந்து வெளியே வந்தனர். பின் அப்பகுதியில் சென்ற பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் எஸ்.ஐ ராஜேந்திரன் போதையில் ரகளை செய்த 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post போதையில் ரகளை செய்த கும்பல் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Chanarpatti ,Ashokumar ,Kosavapatti Pudutheru ,Dinakaran ,
× RELATED அடிப்படை வசதி செய்துதர கோரிக்கை