- 22ம்தேதி யோகம்
- பயிற்சி
- மாவட்ட மைய நூலகம்
- திருச்சி
- மாவட்ட மையம்
- சர்வதேச யோகா தினம்
- 22ம்தெடி யோகப் பயிற்சி
திருச்சி, ஜூன் 18: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் வரும் ஜூன் 22ம் தேதி யோகா பயிற்சி நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் மற்றும் ரங்கம் விவேகானந்தா யோகா மையம் இணைந்து 9வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட மைய நூலகத்தில் ஜூன் 22ம் தேதி மாலை 5 மணிக்கு யோகா பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் எளியமுறை உடல் தளர்வு பயிற்சிகள், யோகாசனங்கள், மூச்சுப்பயிற்சி, பிராணாயாமம், தியானம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சிகளை யோகாமைய முதன்மை பயிற்றுனர்கள் பயிற்றுவிக்க உள்ளனர். இதில் ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் தனலெட்சுமி அழைப்பு விடுத்துள்ளார்.
காவிரி பாலம் அருகே புதிய பாலம்
நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதற்கான தேதி விரைவில் அறிவிப்பார். திருச்சியில் பாதாள சாக்கடை பணிகள் இன்னும் 25 கி.மீ. மட்டுமே பாக்கி உள்ளது. அதுவும் விரைவில் முடியும். தற்போதுள்ள காவிரிபாலம் அருகே புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என்று அமைச்சர் நேரு தெரிவித்தார். விழாவில், மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன் (லால்குடி), கதிரவன் (மண்ணச்சநல்லூர்), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post 2 அமைச்சர்கள் வழங்கினர் மாவட்ட மைய நூலகத்தில் 22ம்தேதி யோகா பயிற்சி appeared first on Dinakaran.