×

நண்பர்களுடன் `பார்ட்டி’ கொண்டாடிய வியாபாரி சாவு

புளியங்குடி,ஜூன் 18: புளியங்குடி வல்லப விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகன் மாரியப்பன் (45). இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாரியப்பன் மற்றும் தனது நண்பர்களுடன் வைகுண்டம் என்பவரது தோட்டத்தில் மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அளவுக்கு அதிகமாக மாரியப்பன் மது அருந்தியுள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் மாரியப்பன் தோட்டத்திலேயே தூங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை அவரை சக நண்பர்கள் எழுப்பியுள்ளனர். அப்போது தான் மாரியப்பன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், எஸ்ஐ பரமசிவம் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாாியப்பனுக்கு மனைவி ராணி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

The post நண்பர்களுடன் `பார்ட்டி’ கொண்டாடிய வியாபாரி சாவு appeared first on Dinakaran.

Tags : Pliyangudi ,Madasami ,Mariappan ,Bleyangudi ,Vallaba Vinayegar Temple Street ,
× RELATED மூதாட்டி தீக்குளித்து தற்கொலை