×

பெண் அதிகாரியிடம் அநாகரீகமாக நடந்ததாக வன அதிகாரி சஸ்பெண்ட்

ஸ்ரீகாளஹஸ்தி: ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் ஸ்ரீகாளஹஸ்தி வனத்துறை அலுவலகத்தில் வன உதவி அதிகாரியாக ஹஸ்ரத் உன்னிசா(32) என்ற பெண் பணியாற்றி வருகிறார். இவரிடம் மற்றொரு உதவி அதிகாரி வரபிரசாத்(40) கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஹஸ்வரத் உன்னிசா உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்பேரில், உயரதிகாரிகள் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தினர். இதில், அவர் ஹஸ்ரத் உன்னிசாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் வரபிரசாத்தை சஸ்பெண்ட் செய்து வன அதிகாரி மதுசூதன் உத்தரவிட்டார்.

The post பெண் அதிகாரியிடம் அநாகரீகமாக நடந்ததாக வன அதிகாரி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Srikalahasti ,Hazrat ,Unnisa ,Tirupati district ,Andhra ,
× RELATED விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்