×

கொச்சியில் சிறுமி பலாத்காரம் மோசடி மன்னனுக்கு ஆயுள் தண்டனை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் மோன்சன். இவர் கொச்சியில் புராதனப் பொருட்கள் விற்பனை மையம் ஒன்றை நடத்தி வந்தார். ஆனால் அவரிடமிருந்த பெரும்பாலான பொருட்கள் போலி என தெரியவந்தது. பழங்காலப் புராதனப் பொருட்கள் என்று கூறி பலரை ஏமாற்றி இவர் அவற்றை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தார். இது தொடர்பாக கடந்த சில வருடங்களுக்கு முன் போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையே இவரிடம் பணி புரிந்து வந்த ஒரு பெண் ஊழியரின் 17 வயது மகளை படிக்க வைப்பதாக கூறி மோன்சன் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக மோன்சன் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மோன்சனுக்கு நேற்று ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

The post கொச்சியில் சிறுமி பலாத்காரம் மோசடி மன்னனுக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Kochi ,Thiruvananthapuram ,Alappuzha, Kerala ,Kochi.… ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...