×

கணவர் இறந்ததால் விபரீத முடிவு 2 மகள்கள், மகனை கொன்றுவிட்டு தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கணவர் இறந்த துக்கத்தில் 3 பிள்ளைகளை கொன்று, தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கோட்டையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (40). விவசாயி. மனைவி பாண்டீஸ்வரி (35). மகள்கள் வைத்தீஸ்வரி (15), காளீஸ்வரி (11), மகன் விக்னேஸ்வரன் (4). இதில், வைத்தீஸ்வரி 11ம் வகுப்பு, காளீஸ்வரி 6ம் வகுப்பு படித்து வந்தனர். உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரன் கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். கணவர் இறந்ததால், ‘‘இனி எப்படி குழந்தைகளை வளர்ப்பேன்? எப்படி வாழப்போகிறோம்’’ என பாண்டீஸ்வரி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை 8 மணி அளவில் 2 மகள்கள், மகனோடு தோட்டத்திற்கு சென்ற பாண்டீஸ்வரி, பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வத்திராயிருப்பு போலீசார் மற்றும் ஊர் மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறந்து கிடந்த பாண்டீஸ்வரி, மகள்கள் வைத்தீஸ்வரி, காளீஸ்வரி, விக்னேஸ்வரன் உடல்களை மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கணவர் இறந்த துக்கத்தில் 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்த சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கணவர் இறந்ததால் விபரீத முடிவு 2 மகள்கள், மகனை கொன்றுவிட்டு தாய் கிணற்றில் குதித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vathirairipu ,
× RELATED வ.புதுப்பட்டியில் தீ தடுப்பு சிறப்பு பயிற்சி