×

கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய 180 பேருக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க ஐகோர்ட் ஆணை..!!

மதுரை: கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய 180 பேருக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. பிஆர்பி கிரானைட், விஜயா கிரானைட்ஸ், முருகேசன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையில் புறம்போக்கு நிலங்களில் உள்ள 25,321 கருப்பு கிரானைட்களை ஏலம் விடும் அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. அலுவலகங்களுக்கு சீல், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதால் கிரானைட் உரிமையை கோர முடியவில்லை என்று நிறுவனங்கள் தெரிவித்தன. புறம்போக்கு நிலத்தில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் மதிப்பிழந்து வருவதால் அவற்றை ஏலமிட முடிவு செய்துள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்தது.

The post கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய 180 பேருக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : iCort ,Madurai ,BRP Granite ,Vijaya ,Dinakaran ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது