×

2 ஆண்டுகளாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் தமிழகம் தலைநிமிர்ந்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: 2 ஆண்டுகளாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் தமிழகம் தலைநிமிர்ந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நிதி நுட்ப திட்டங்களை மதி நுட்பத்துடன் ஈர்க்க அரசு ஏராளமான முயற்சிகளை செய்து வருகிறது. நிதிநுட்ப நகரங்களின் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்றுவதே அரசின் இலக்கு. நிதி நுட்ப சேவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்கு ஏதுவாக நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு, ரூ.12,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நிதிநுட்ப நகரம் அமைகிறது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

The post 2 ஆண்டுகளாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் தமிழகம் தலைநிமிர்ந்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Chief Minister ,MC. G.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Mukhari ,G.K. Stalin ,B.C. G.K. Stalin ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...