×

ஐதராபாத் பனாமா சந்திப்பில் உள்ள பர்னிச்சர் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்புள்ளபர்னிச்சர்கள் எரிந்து சேதம்

ஐதராபாத்: ஐதராபாத் வனஸ்தலிபுரத்தில் உள்ள பர்னிச்சர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அறைகலன்கள் எரிந்து சேதமடைந்தன. ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம் பனாமா சந்திப்பில் உள்ள பர்னிச்சர் ஷோரூமில் நேற்று நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தேக்கு, வேம்பு உள்ளிட்ட மர பர்னிச்சர்களில் பரவிய தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 3 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பர்னிச்சர்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஐதராபாத் பனாமா சந்திப்பில் உள்ள பர்னிச்சர் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்புள்ளபர்னிச்சர்கள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Panama ,Vanasthalipura, Hyderabad ,Dinakaran ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்