×

கும்பகோணம் அரசு டெப்போவில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி

கும்பகோணம், ஜூன் 17: கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பொது மேலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்திய குடிமகன், குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பாராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும் உடல்ரீதியாகவும், காயப்படுத்தும் தாகத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என பொது மேலாளர் கூறினார், அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்சியில் துணை மேலாளர்கள் சிங்காரவேலு, கணேசன், ராஜேந்திரன், உதவி மேலாளர்கள் ஆனந்தன், வெங்கடேசன், வேலுமணி, நாகமுத்து, ராஜசேகர், வடிவேலு மற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post கும்பகோணம் அரசு டெப்போவில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Kumbakonam Government Depot ,Kumbakonam ,Kumbakonam Tamil Nadu Government Transport Corporation Headquarters ,Dinakaran ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...